2ஜி ஊழல் வழக்கு: 80,000 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை சிபிஐ டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் ராஜா உள்பட 12 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை 7 சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் கொண்டு வந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி முன் சிபிஐ இன்று சமர்பித்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராஜாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டிபி ரியாலிட்டி அதிபர் ஷாகித் பல்வா தவிர கெளதம் தோஷி, செளரப் பபாடியா, ஹரி நாயர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் மற்றும் ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, ஸ்வான் நிறுவன இயக்குனர் ஷாஹித் பல்வா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல்வாவின் தம்பி ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரும் 2ஜி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இந்த மாத இறுதியில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications