சென்னை எங்கள் கோட்டை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சென்னை: சென்னை அதிமுகவின் கோட்டை என்பதை வரும் சட்டசபை தேர்தலிலும் நிரூபிப்போம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பிரசாரத்திற்கு புறப்படுவதற்கு முன் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
2ஜி ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரிக்கை பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் எனது கருத்தைக் கூற முடியும்.
மதுரையில் திமுக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தான் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
சென்னை மாநகரம் ஏற்கனவே அதிமுக கோட்டையாகத் தான் உள்ளது. இதை வரும் சட்டசபை தேர்தலிலும் நிரூபிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications