நயினார் நாகேந்திரன் வீட்டில் தங்கமறுத்த ஜெ.: தூத்துக்குடியி்ல் ஸ்டே!
நெல்லை: தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பாதுகாப்பு கருதி முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தங்கவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று குமரியிலும், நெல்லையிலும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இன்றும் அவர் நெல்லையில் பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவு ஜெயலலிதா பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் வீட்டில் தங்குவதாக இருந்தது. ஆனால் அவர் அங்கு தங்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்குச் சென்று அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இது குறித்து தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, பாதுகாப்பு காரணம் கருதி அவர் தூத்துக்குடியை தேர்வு செய்ததாக கூறினர்.