அவங்களுக்கு ஆப்படிக்க ஆஃப் அடிச்சாதான் சரியா வரும்-விஜயகாந்த்

விஜயகாந்த்தை தனது பிரசாரக் கூட்டங்களிலெல்லாம் தாறுமாறாக விமர்சித்து வருகிறார் காமெடியன் வடிவேலு. விஜயகாந்த்தை லூஸு, குடிகாரன் என்றெல்லாம் பேசி வருகிறார். டம்மி பீஸ் என்கிறார், அது, இது என்று பேசுகிறார்.
இந்த நிலையில் விஜயகாந்த்தும் தன் பங்குக்கு திமுகவினர் மற்றும் ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாயில் வலியக்க வந்து சிக்கிக் கொள்கிறார். சமீபத்தில், தர்மபுரியில் நடந்த பிரசாரத்தின் போது சொந்தக் கட்சி வேட்பாளரையே போட்டுஅடித்து விட்டார் விஜயகாந்த். இதை விடிய விடிய ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் டிவிகளில் காட்டி விஜயகாந்த்தை நாறடித்து விட்டனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் அவராகவே ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாய்கள் மெல்வதற்கு அவலைக் கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட தர்மத்துப் பட்டியில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில்,
நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும் என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் இந்தப் பேச்சால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications