இந்திய-நேபாள எல்லையில் பூகம்பம்-டெல்லியில் நில அதிர்வு
டெல்லி: இந்திய மற்றும் நேபாள எல்லையில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ஆக பதிவானது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டு அதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இன்று மாலை 5.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியின் பல பகுதிகள் மற்றும் நொய்டாவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் பெரிய அளவில் அதிரவில்லை என்ற போதும், வீட்டில் இருந்த பொருட்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவின் பல்வேறுபகுதிகளிலும் கூட நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்ச்சியால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications