Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொதுக்கணக்குக் குழு முன் அனில் அம்பானி ஆஜரானார்!!

Subscribe to Oneindia Tamil

Anil Ambani
டெல்லி: தொழிலதிபர் ரத்தன் டாடா, அவரது மீடியா ஒருங்கிணைப்பாளரும் அரசியல் தரகருமான நீரா ராடியாவைத் தொடர்ந்து, பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியும் பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

2ஜி ஊழல் குறித்து பார்லிமென்ட் பொது கணக்குக் குழு விசாரித்து வருகிறது.

முரளி ம‌னோகர் ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவின் முன் நேற்று அரசியல் தரகர் நீரா ராடியா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோர் ஆஜராகி, கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று பிஏசி விசாரணைக்கு ஆஜரானார் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவருக்கும் சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு, முன்னாள் அமைச்சர் ஆ ராசாவுடனான தொடர்புகள் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டது. பிஏசி தலைவர் முரளி மனோகர் ஜோஷி அவரிடம் விசாரணை நடத்தினார்.

எடிஸாலட் டிபி நிறுவனத்தின் சிஇஓ அதுல் ஜாம், எஸ் டெல் சிஇஓ ஷமிக் தாஸ், யுனிடெக் நிறுவனத்தின் சிக்வி பிரேக் உள்ளிட்ட தொழிலதிபர்களும் இன்று பொதுக்கணக்குக் குழு முன் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+