சென்னையில் பெண் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை
சென்னை: சென்னையில் பெண் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி ரமணி (40). இவர் இன்று காலை தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டினர்.
கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ரமணி அந்த இடத்திலேயே பலியானார். ரமணியின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தங்கை வேல்விழி அங்கு வந்தார். அவரையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டது.
கொலை செய்யப்பட்ட ரமணி மீது பல்வேறு கஞ்சா வழக்குகள், கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்குகள் உள்ளன. பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரமணி மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக வட சென்னை பகுதியை கலக்கி வந்த இந்த பெண் தாதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு கஞ்சா வியாபாரியான முருகம்மாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்தது.
இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்வதும் வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முருகம்மாள் கோஷ்டி ரமணிக்கு குறி வைத்தது. ஆனால் அதில் ரமணி தப்பிவிட்டார். ரமணியின் தம்பி சக்திவேல் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முருகம்மாளும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் ரமணியையும் அதே கும்பல்தான் தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கூலிப்படையை ஏவி இக்கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications