சென்னையில் பெண் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை
சென்னை: சென்னையில் பெண் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி ரமணி (40). இவர் இன்று காலை தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டினர்.
கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ரமணி அந்த இடத்திலேயே பலியானார். ரமணியின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது தங்கை வேல்விழி அங்கு வந்தார். அவரையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டது.
கொலை செய்யப்பட்ட ரமணி மீது பல்வேறு கஞ்சா வழக்குகள், கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்குகள் உள்ளன. பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரமணி மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக வட சென்னை பகுதியை கலக்கி வந்த இந்த பெண் தாதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு கஞ்சா வியாபாரியான முருகம்மாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்தது.
இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொள்வதும் வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முருகம்மாள் கோஷ்டி ரமணிக்கு குறி வைத்தது. ஆனால் அதில் ரமணி தப்பிவிட்டார். ரமணியின் தம்பி சக்திவேல் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முருகம்மாளும், அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் ரமணியையும் அதே கும்பல்தான் தீர்த்துக் கட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கூலிப்படையை ஏவி இக்கொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications