ஆம்னி பஸ்ஸில் ரூ. 5.11 கோடி பறிமுதல்: 6 பேர் மீது வழக்கு-தொடர் விசராணை
திருச்சி: திருச்சியில் தனியார் ஆம்னி பஸ்ஸில் கைப்பற்றப்பட்ட ரூ. 5.11 கோடி சமபவம் தொடர்பாக பஸ் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திருச்சியில் நேற்று முன்தினம் தனியார் ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் இருந்து ரூ. 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரத்தை திருச்சி மேற்கு சட்டசபை தேர்தல் அதிகாரி டாக்டர் சங்கீதா பறிமுதல் செய்தார். வாகனச் சோதனையில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது இது தான் முதல் தடவை.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறையினர் மூலம் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் உதயகுமரன், அவரது மகன் அருண் பாலாஜி, மேலாளர் பாலு ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பல பரபரப்பான தகவல்கள் அளித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் அவற்றை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது அங்கு காரில் வந்த 4 பேர் அதிகாரிகளைப் பார்த்தும் நைசாக ஓடிவிட்டனர். அவர்கள் யார்? யாருடைய பணம்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரி சங்கீதா திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த சந்தேகம் மற்றும் முயற்சி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பஸ்சின் உரிமையாளர் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் திருச்சி உதயகுமரன், அலுவலக ஊழியர்கள் செல்வராஜ், குமார், பழனி, தமிழகன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை கண்டோன்மெண்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications