பெரும்பாலான இடங்களில் காங்.-திமுக வெற்றி உறுதி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ், திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று வாக்களிக்க வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது மனைவி வரலட்சுமியுடன் வந்து ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த தேர்தலில் மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். காலை 8 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பது நல்ல விஷயம்.
தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுவது பாராட்டுக்குரியது. இன்னும் கூட கடுமையாக நடந்திருக்கலாம். எனினும்
அதன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
இந்த தேர்தலில் மக்கள் நலனைக் கருத்தில் வைத்து செயல்படும் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்றார்.
அப்போது இந்த தேர்தலில் தங்கபாலு வெற்றிபெறுவாரா என்று கேட்டதற்கு, தேர்தலுக்குப் பிறகு கூறுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications