பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தின் சில இடங்களில் பல வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் அங்கு வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

இன்று காலை தொடங்கிய சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அப்போது சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர செயல்படவில்லை.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் 3 வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் பழுதுபட்டன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வாக்குப் பதிவு தொடங்கவில்லை. தாமதமாகவே தொடங்கியது. இதையடுத்து அங்கு எவ்வளவு காலதாமதமானதோ அதற்கேற்ப 5 மணிக்குப் பிறகும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல ராமேஸ்வரம், ராஜபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாரறு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி, வேடசந்தூர் ஆகிய இடங்களிலும் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+