சட்டசபை தேர்தல்: கேரளாவில் 74% வாக்குப்பதிவு
திருவனந்தபுரம்: நேற்று நடந்த கேரள சட்டசபை தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
நேற்று தமிழகம், புதுவையைப் போன்று 140 தொகுதிகள் கொண்ட கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 971 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்திலேயே கண்ணூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.4 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் 80.2 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களில் 77 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. பத்தனம்திட்டா (68.2), திருவனந்தபுரம் (68.5%) ஆகிய மாவட்டங்களில் தான் மிகக் குறைவான வாக்குப்பதிவு நடந்துள்ளது. அச்சுதானந்தன் போட்டியிடும் மலம்புழா உள்ள பாலக்காடு மாவட்த்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் போட்டாபோட்டியாக இருக்கிறது.
இடதுசாரி அணியின் தலைமைக் கட்சியான மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 93 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இடதுசாரிகளின் நட்சத்திர வேட்பாளரான முதல்வர் அச்சுதானந்தன் மூன்றாவது முறையாக மலம்புழாவில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரசைத் சேர்ந்த லதிகா சுபாஷ் போட்டியிடுகிறஆர். காங்கிர்ஸ 82 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 24 இடங்களில் போட்டியிடுகின்றது.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உம்மன் சாண்டி கோட்டயம் மாவட்டத்திலுள்ள புதுப்பள்ளியில் போட்டியிடுகிறார். இவர் இதே தொகுதியில் 9 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஹரிப்பாடு தொகுதியி்ல் போட்டியிடுகிறார். அவருக்கு முதல்வர் பதவியை வகிக்க விருப்பம் உள்ளது. அதனால் காங்கிரஸ் வெற்றி பெற்றால் உம்மன் சாண்டிக்கும், ரமேஷ் சென்னிதலாவுக்கு இடையே போட்டியிருக்கும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications