மதுரை வாக்குச் சாவடியில் 75 வயது மூதாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவடத்தில் வாக்களிக்க வந்த 75 வயது மூதாட்டி வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தமிழகம் முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட
சின்ன உலகணியைச் சேர்ந்தவர் பி. யசோதா(75). நேற்று காலை மணிக்கு அவர் பெரிய உலகணி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். இந்த தள்ளாத வயதிலும் ஓட்டுப் போட வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர் 2 உறவினர்கள் துணையோடு வந்திருந்தார்.
கடந்த சில தினகங்களாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்களிக்க வந்த அந்த மூதாட்டி வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications