ஆட்சி மாற்றத்திற்காகவே எழுச்சியுடன் வாக்களித்த மக்கள்: டி.ராஜா
சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மக்கள் எழுச்சியுடன் வாக்களித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட வெங்கட் நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் டி. ராஜா வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழவதும் உள்ள மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுச்சியுடன் வாக்களித்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரப்போவது உறுதி என்றார்.
அதிமுக ஆட்சி உறுதி: தா.பா
சட்டசபை தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டசபை தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் அமைதியாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்து வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கப்போவது உறுதி என்றார்.
திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தல்: பொன். ராதாகிருஷ்ணன்
இந்த தேர்தல் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. எதிர்காலத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவரும், நாகர்கோவில் வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications