2ஜி உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து டொனேஷன் பெற்ற தமிழ் மையம்
டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.
கனிமொழி, தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த மையம்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தி வருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் மையம் அமைப்பு, 2ஜி உரிமம் பெற்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில், தமிழ் மையம் அமைப்புக்கு அந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நேரடியாகவே நன்கொடைகளை வழங்கியது தமிழ் மையம் அமைப்பின் ஆடிட் செய்யப்பட்ட பாலன்ஸ் ஷீட் மூலம் தெரிய வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அந்த காலகட்டத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராசா இருந்தார். அப்போதுதான் 2ஜி உரிமங்களும் அவரால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய தகவலால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சூடு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications