தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு ஏன்?-நரேஷ் குப்தா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலி்ல் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகியதற்கான காரணம் குறி்தது முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 5 சதவீதமும், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலைவிட 7 சதவீதமும் அதிகமாகும்.
இந்த தேர்தலில் அதிகமான அளவில் வாக்குகள் பதிவாகியதற்கு காரணம் வாக்களர்களின் ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர மக்கள் ஏராளமானோர் வாக்களித்தது தான். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி மற்றும் கடந்த 2005ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிதாக பெயர் சேர்க்கப்பட்டதும் கூட வாக்காளர்களை வாக்களி்கக தூண்டியிருக்கலாம்.
இந்தத் தேர்தலில் பணப் பட்டுவாடா மிக மிக குறைந்த அளவில் தான் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடியால் பணம் கடத்தப்படுவதும், வினியோகிக்கப்படுவதும் தடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பணப் பட்டுவாடா தான் பெரும் பிரச்சனை. அதனால் தான் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வேட்பாளரின் செலவுக் கணக்கை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் ஏராளமான துணை ராணுவத்தினரும், வருமானவரித்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கணக்கில் காட்டப்படாத ரூ. 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணியில் குடியிருப்போர் நல சங்கத்தினர், சமூக சேவை அமைப்பினரையும் ஈடுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும்போது, மேற்கண்ட அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி, வாக்காளரை அடையாளம் காணவும், விண்ணப்பத்தை வழங்கிடவும், வயது, முகவரி தொடர்பான ஆவணங்களையும், புகைப்படத்தையும் வாங்குவதற்கும் உதவியாக இருப்பார்கள். இத்தகைய தனியார்-அரசு கூட்டு முயற்சி திட்டத்தை, பெங்களூர் நகரில் உள்ள ஒரு தொகுதியில் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள் என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications