மேற்கு வங்காளத்தில் 54 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக நாளை 54 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பெகார், நார்த் திஞ்சாபுர், தெற்கு திஞ்சாபுர், மால்டா ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதிகள் உள்ளன.
கடந்த 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள இடதுசாரி கூட்டணிக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த மாநில தேர்தல் காரணமாகத் தான் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வாக்குப் பதிவு ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications