சென்னையில் பட்டபகலில் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
சென்னை: திருவான்மியூரில் உள்ள ஒரு தொழில் அதிபர் வீட்டில் பட்டப்பகலில் 45 பவுன் நகையும், ரூ. 12 ஆயிரம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியி்ல் பரபரப்பு ஏற்பட்டது.
திருவான்மியூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் (53). அவருக்க அதே பகுதியில் உள்ள அவ்வை நகரில் சொந்தமாக லேத் பட்டறை உள்ளது. அவர் வழக்கம் போல் காலையிலேயே பட்டறைக்கு கிளம்பிவிட்டார். அவரது மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு காய்கறி வாங்கச் சென்று விட்டார். காய்கறி வாங்கிவிட்டு வந்தபோது பூட்டிச் சென்ற கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகளும், ரூ. 12 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உடனே திருவான்மியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைக்குச் சென்றுவிட்டு திரும்புவதற்குள் நடந்த இந்த கொள்ளையால் அப்பகுதி பக்கள் பீதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications