கொடநாடு வந்தார் ஜெயலலிதா-சசிகலாவுடன் ஓய்வு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்க இன்று கொடநாடு சென்றார்.
இன்று பிற்பகல் 12.45 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் கோவை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 24 நாட்கள் உள்ள நிலையில், ஜெயலலிதா 2 வாரங்களுக்கு இங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பெரும்பாலான நாட்களை தனது கொடநாடு எஸ்டேட்டில் தான் ஜெயலலிதா கழித்தார் ஜெயலலிதா. தேர்தல் நெருங்கியதும் தான் சென்னைக்குத் திரும்பினார்.
கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ:
இதற்கிடையே, நடந்து முடிந்த தேர்தல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம், ஆட்சியில் பங்கெடுப்பது போன்ற பல கேள்விகளோடு ஜெயலலிதாவைச் சந்திக்க காத்திருந்தனர் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள். அப்பாயின்ட்மெண்டும் கேட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஜெயலலிதா நேரம் ஒதுக்கவில்லை.












Click it and Unblock the Notifications