வேலூரில் 102 டிகிரி வெயில்: திருப்பத்தூரில் 100
சென்னை: நேற்று தமிழகத்திலேயே அதிகமாக வேலூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் குளிரான இடங்களைத் தேடிச் செல்கின்றனர். தகிக்கும் வெயிலின் கொடுமையை குறைக்க மக்கள் அதிகளவில் தர்பூசணிப் பழங்களை உட்கொள்கின்றனர். இந்நிலையில் வெயிலுக்கு பெயர் போன வேலூரில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
மாநிலத்தின் முக்கிய இடங்களில் பதிவான வெயில் அளவு(டிகிரி ஃபாரன்ஹீட்டில்),
சென்னை 93, திருச்சி, திருப்பத்தூர் 100, சேலம், மதுரை 98, தர்மபுரி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை 96.
நேற்று தமிழகத்தின் சில இடங்களில் கோடை மழை பெய்தது. கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல்நேர வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications