மும்பை கடலில் ஏகே 47 துப்பாக்கிகள்-8 பேர் கைது
மும்பை: கைதான டென்மார்க் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல்படையினரைப் பார்த்தும் தாங்கள் வைத்திருந்த 2 ஏகே 47 ரக துப்பாக்கிகளை மும்பை கடலில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு வரும் கப்பலில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மும்பைக்கு வரும் அனைத்து கப்பல்களையும் சோதனை செய்தனர். அப்போது டென்மார்க் நாட்டில் இருந்து வந்த டேனிகா சன்ரைஸ் கப்பலை துரத்திப் பிடித்து சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் கப்பலில் இருந்த 8 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதில் முன்னாள் இங்கிலாந்து இராணுவத்தினர் 2 பேரும் அடக்கம்.
விசாரணையில் அவர்கள் தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று உறுதியாயக் கூறினர். பின்னர் தாங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர்கள் உண்மையை தெரிவித்தனர். கப்பலில் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகளும், மேலும் 2 துப்பாக்கிகளும் வைத்திருந்ததாகவும் கடலோர காவல்படை துரத்தியபோது அதை கடலில் வீசிவிட்டதாகவும் கூறினார்கள்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள அந்த கப்பல் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் கேட்வே ஆப் இந்தியா அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
அந்த கப்பலில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications