மதுரை மேற்கு தொகுதி பணம் பட்டுவாடா-தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினார் கலெக்டர் சகாயம்

மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் ரூ.81 லட்சம் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணம் சிக்கியதை அடுத்து அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இந் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மேற்கு தொகுதியில் விசாரணை நடத்திய கலெக்டர் சகாயம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு தனது 3 பக்க அறிக்கையை அனுப்பினார்.
இது தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சகாயம் எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை என்று தெரிகிறது.
ஆனாலும் அவர் அனுப்பிய அறிக்கை மற்றும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதியானால் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது மதுரை மேற்கு தொகுதியின் தேர்தல் முடிவு நிறுத்திவைக்கப்படலாம்.
அல்லது தேர்தலை ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலையொட்டி மதுரையின் 10 தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகள் நடத்தி ரூ.4 கோடி பறிமுதல் செய்தனர்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த ஒரு காரை சோதனையிட்டபோது சிக்கிய ஒரு டைரியில் மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டிருந்தன.
ரூ.81.20 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. 65வது வார்டுக்கு ரூ.16.35 லட்சம், 66வது வார்டுக்கு ரூ.18.96 லட்சம், 67வது வார்டுக்கு ரூ.21.11 லட்சம், 69வது வார்டுக்கு ரூ.24.41 லட்சம் தரப்பட்டுள்ளதாக அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த டைரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக தேர்தல் கமிஷனும் சகாயத்திடம் அறிக்கை கோரியது என்பது நினைவுகூறத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications