3 நர்சுகளுக்கு செக்ஸ் தொந்தரவு-ஆயுர்வேத மருத்துவர் கைது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: 3 நர்ஸ்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்த ஆயுர்வேத மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செல்வராஜ் (58). பரம்பரை வைத்தியரான இவர் மேலப்பாளையம் அருகே நத்தத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

இந்த மருத்துவமனையில் குமாரி (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நர்சாக வேலைக்கு சேர்ந்தார். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் டாக்டர் செல்வராஜ், இந்த நர்ஸை தனது அறைக்குள் அழைத்து தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அந்த நர்ஸ் மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் டாக்டர் செல்வராஜ், நர்ஸ் குமாரி, இன்னொரு நர்சான ஜெனீபர் (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் டாக்டர் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விசாரணையில் செல்வராஜ் ஆயுர்வேத டாக்டராக பயிற்சி எடுத்துக் கொண்டாரே தவிர தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. ஆனாலும் இவர் கன்னியாகுமரி மற்றும் சென்னையில் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார். இதை அவரது இரண்டு மனைவிகள் நிர்வகித்து வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த ஆண்டு இவர் களியக்காவிளையில் ஒரு நர்சை திருமணம் செய்துள்ளார். மேலப்பாளையத்தில் மருத்துவமனை தொடங்கிய பிறகு அங்கு பணி செய்த நர்சுகள் குமாரி, ஜெனீபர் தவிர சாந்தி (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூன்று பேரையும் அவ்வப்போது நள்ளிரவில் தனது அறைக்கு வரவழைத்து செல்வராஜ் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+