சென்னையில் ஆயிரக்கணக்கானோர் சாய்பாபாவுக்கு அஞ்சலி!

அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மறைந்த தங்கள் குருவுக்கு கண்ணீருடன் மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஆசிரமத்தில் உள்ள அரங்கில் 2 இடங்களில் சாய்பாபா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
பல பக்தர்கள் பாபா குறித்து பேச முடியாமல் நாதழுதழுத்தனர். சாய்பாபா உயிர் பிரிந்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இன்னும் அவர் எங்களுடன் இருப்பதாகவே கருதுகிறோம், என்றனர்.
டி.வி. நடிகை சந்திராவும் சாய்பாபாவின் தீவிர பக்தை ஆவார். இன்று காலையில் சாய்பாபா இறந்த தகவல் கிடைத்ததும் ஆசிரமத்துக்கு விரைந்து வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சாய்பாபாவின் படத்தை தொட்டு வணங்கினார். சாய்பாபா மீண்டும் உயிர்த் தெழுந்துவிடுவார் என தெரிவித்தார்.
ஆசிரமத்துக்கு வந்த பல ஆண் பக்தர்களும் துக்கம் தாங்காமல் கதறி அழுததை காணமுடிந்தது.
ஆசிரமமே சோகத்தில் மூழ்கியது. அதே நேரம், சிலர் மனததை தேற்றிக் கொண்டு பாபா பஜன்களைப் பாடியவண்ணம் இருந்தனர்.
சென்னை மீது எப்போதுமே பாபாவுக்கு தனி பாசம் இருந்தது. தனது அனைத்து திட்டங்களும் சென்னையிலும் செயல்படும்படி அவர் பார்த்துக் கொண்டார்.
மதுரை, கொடைக்கானலில்...
மதுரை மற்றும் கொடைக்கானலில் உள்ள பாபாவின் ஆசிரமங்களிலும் இன்று ஏராளமான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்












Click it and Unblock the Notifications