For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிதம்பரம் அருகே மீனவ கிராமங்களிடையே கடும் மோதல்: போலீஸ் குவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மீன் பிடிப்பது தொடர்பாக இரு கிராம மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ளது பரங்கிப்பேட்டை அணன்கோயில். இந்த பகுதியைச் சேர்ந்த மீனவ கிராம மக்களுக்கும் பக்‌கத்துக்கு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பது ‌தொடர்பாக திடீர் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் மீன் வாங்க வந்த சில்லறை வியாபாரிகளின் வாகனங்களை ஒரு தரப்பினர் அடித்து நொறுக்கவே இரு கிரமாத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசமபாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Fishermen of 2 nearby villages have clashed over fishing. In this one group has damaged 6 vehicles. Security is tightened in this area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X