ரவீந்திரநாத் தாகூர் உருவப்படத்துடன் 5 ரூபாய் நாணயம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசியகவி ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் நிறைவை குறிக்கும் வகையில், அவருடைய உருவப்படத்துடன் கூடிய புதிய 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விடுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நாணயத்தின் முன்புறத்தில், அசோகா தூணின் சிங்கமுகம் இடம் பெறுகிறது. மையப் பகுதியில் சிங்க முகத்தின் கீழே மதிப்பு இலக்கம் 5 என்பது சர்வதேச எண் அளவில் இருக்கும்.
நாணயத்தின் பின்புறம் ரவீந்திரநாத் தாகூர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாகூரின் 150 வது பிறந்த நாள் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் ரூ 150 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. ஆனால் இவை புழக்கத்துக்கு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர். நோபல் பரிசு வென்ற பெரும் கவிஞர்.












Click it and Unblock the Notifications