தமிழ் மட்டுமே தெரிந்ததால் குற்றவாளி முத்திரையிலிருந்து தப்பிய தயாளு அம்மாள்

இதுகுறித்து தனது 2வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விரிவாகத் தெரிவித்துள்ளது.
கலைஞர் டிவியில் 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளவர் தயாளு அம்மாள். கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ளபோதிலும், சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணத்தை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தெளிவாக்குகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாளை சாட்சிகளில் ஒருவராக சேர்த்துள்ளது சிபிஐ. அதாவது கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக இவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாளு அம்மாள் குறித்து சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், கலைஞர் டிவி இயக்குநர்கள் குழுவிடம், தனக்கு வயதாகி விட்டதாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தனக்குத் தெரியாது என்பதாலும், கூட்டத்திற்கு வெறுமனே வந்து போவேன், வேறு எந்த பணியையும் தன்னால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பாக உங்களது முழுத் திறமைகளையும், அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துமாறும் அவர் சரத்குமார் ரெட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாரணையின்போது சிபிஐ கைப்பற்றிய ஒரு ஆவணத்தில், தனக்கு வயதாகி விட்டதையும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதையும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. இதுகுறித்து 2007ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி நடந்த இயக்குநர் குழுக் கூட்ட மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன விவகாரம் தொடர்பாக தன்னால் எதையும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக எதையும் தான் கவனிக்க முடியாது என்றும் தயாளு அம்மாள் தெரிவித்துள்ளார். எனவே கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பான எதிலும் தயாளு அம்மாளுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வருகிறது - அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார் என்பதைத் தவிர.
தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதை கம்பெனி பதிவாளருக்கும் முறைப்படி கலைஞர் டிவி தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது சிபிஐ.
இதன் மூலம், தமிழ் மட்டுமே தெரிந்த காரணத்தால் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்திலிருந்து தயாளு அம்மாள் தப்பியுள்ளார் என்பது புலனாகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications