தேனீக்களிடம் சிக்கிய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோரை தேனீக்கள் சூழந்து தாக்கத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் நீர் கசிவதை ஆய்வு செய்ய ஒரிசாவில் இருந்து சிறப்பு குழு வந்தனர்.
அந்த ஆய்வுக் குழுவுடன் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன், நிருபர்கள் குழு சாத்தனூர் அணையின் மதகுக்கு ஒரு படகின் மூலம் சென்றனர்.
படகில் செல்பவர்களுக்கு பாதுகாப்பாகவும், படகு ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அணையின் மேலிருந்து படகுடன் ஒரு கயிறு இணைக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாரா வண்ணம் அணையில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த இடத்தில் அந்த கயிர் மோதியது. இதில் கூடு சேதம் அடைந்தது. இதையடுத்து தேனீக்கள் பறந்து வெளியேற ஆரம்பித்தன. கலெக்டர் ராஜேந்திரன், டிவி கேமராமேன் விஜி ஆகியோரை தேனீக்கள் கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் இருவரும் அலறினர்.
சிறப்பு படை வீரர்களையும் தேனீக்கள் கொட்டியதால் அவர்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடமுடியாமல் திரும்பினர்.
தேனீக்கள் கொட்டியதால் கலெக்டர் உள்ளிட்டவர்கள் சிசிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை பெற்று திரும்பினர்.












Click it and Unblock the Notifications