போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்குத் தண்டனை தரக் கோரி சிபிஎம் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் தண்டனை வாங்கித் தரக் கோரி மே முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என்று ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய கொடூரமான கொலைகளுக்கும், பல்லாயிரம் தமிழர்களின் உயிரிழப்புக்கும், மனிதஉரிமை மீறல்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பாகும்.

இலங்கை அரசின் கொடிய மனித உரிமை மீறல் குறித்து முழுமையான விசாரணை நடத்திடவும், தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கிடவும், இந்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாகப் பயன்படுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இம்மாதம் முதல்வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+