லேடனைக் கொன்ற சிஐஏ ஏஜென்டுகள்: அமெரிக்க படைகளிடம் பின்லேடன் உடல்

Subscribe to Oneindia Tamil

Osama Bin Laden
இஸ்லாமாபாத்: அல்கொய்தா தலைவர் பின்லேடனைக் கொன்றவர்கள் சிஐஏ ஏஜென்டுகள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோத்தாபாத் என்ற இடத்தில் ஒரு 3 மாடி மேன்சனில் பின்லேடன் பதுங்கியிருப்பதை தொடர்ந்து கண்காணித்து வந்த சிஐஏ குழு, அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பின்லேடனின் பாதுகாவலர்களுக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் அந்த 3 மாடிக் கட்டிடமே தீப்பிடித்து எரிந்தது.

இதில் ஒசாமா கொல்லப்பட்டார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருந்த லேடனை, அமெரிக்கப் படையினர் உள்ளேயே புகுந்து தரை மார்க்கமாக சந்தித்து தாக்கி அழித்துள்ளனர்.

அமெரிக்கப் படைகளிடம் பின்லேடன் உடல்:

கொல்லப்பட்ட பின் லேடனின் உடல் அமெரிக்கப் படைகளிடம் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பின்லேடனின் உடல் புகைப்படம் வழியாக உலகுக்குக் காட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+