லேடனைக் கொன்ற சிஐஏ ஏஜென்டுகள்: அமெரிக்க படைகளிடம் பின்லேடன் உடல்

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோத்தாபாத் என்ற இடத்தில் ஒரு 3 மாடி மேன்சனில் பின்லேடன் பதுங்கியிருப்பதை தொடர்ந்து கண்காணித்து வந்த சிஐஏ குழு, அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பின்லேடனின் பாதுகாவலர்களுக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் அந்த 3 மாடிக் கட்டிடமே தீப்பிடித்து எரிந்தது.
இதில் ஒசாமா கொல்லப்பட்டார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருந்த லேடனை, அமெரிக்கப் படையினர் உள்ளேயே புகுந்து தரை மார்க்கமாக சந்தித்து தாக்கி அழித்துள்ளனர்.
அமெரிக்கப் படைகளிடம் பின்லேடன் உடல்:
கொல்லப்பட்ட பின் லேடனின் உடல் அமெரிக்கப் படைகளிடம் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பின்லேடனின் உடல் புகைப்படம் வழியாக உலகுக்குக் காட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications