ஈமான் அல் ஜவாஹிரியின் கதி என்ன?

நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ஒசாமாவை வலை வீசித் தேடி வந்தன.
இந் நிலையில் பாகிஸ்தானுக்குள் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளார்.
பின்லேடனுடன் எப்போதும் உடன் இருந்தவர் அல் கொய்தாவின் துணைத் தலைவரான ஈமான் அல் ஜவாஹிரி. பின் லேடன் வேட்டையின்போது அவரும் உடன் இருந்தாரா, அவரது கதி என்ன என்பது குறித்துத் தெரியவில்லை.
பின்லேடன் வேட்டை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போடாபாத் என்ற இடத்தில் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் உறுதிபடத் தெரிவித்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு இடத்தை அமெரிக்கப் படையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.
பின்லேடன் அங்கு தங்கியிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். இதையடுத்து சிறிய அமெரிக்கப் படைக் குழு அங்கு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதன் இறுதியில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்லேடனின் உடலை படையினர் கைப்பற்றி விட்டனர் என்றார்.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications