Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2ஜி வழக்கு: சு.சாமியின் கோரிக்கை சட்டப்படி ஏற்புடையதல்ல-சிபிஐ

Subscribe to Oneindia Tamil

Subramanian Swamy
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமியின் கோரிக்கை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சிபிஐ கூறி்யுள்ளது.

சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது சாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் சிபிஐக்கு சட்டரீதியாக உதவ தயாராக இருப்பதாகவும், இதனால் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதில் சிபிஐக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நம்புகிறேன்.

மேலும் என்னை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இது சாத்தியம் தான். இந்த விவகாரத்தில் நானும் விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் உதவ வேண்டு்ம் என்று உத்தரவிட
வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று சாமியின் மனுவுக்கு சிபிஐ பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,

அரசு வழக்கறிஞராக தன்னை நியமிக்க வேண்டும் என்ற சாமியின் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டதல்ல. அவரது தனிப்பட்ட புகாரை தனியாக விசாரிக்கலாம். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித்தை சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றம் ஏற்கனவே நியமனம் செய்துள்ளது.

சிபிஐயின் வழக்குடன் சுவாமியின் மனுவை இணைக்கக் கூடாது. அவரது புகாரை சட்டத்துக்குட்பட்டு தனியாகக் கையாளலாம் என்று கூறியுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் வாதாட தனக்கு அவகாசம் வேண்டும் என சாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதிக்கு இதன் மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+