'கனிமொழி' விவகாரம்: கருணாநிதி, ஸ்டாலின், வீரமணி, சட்ட நிபுணர்கள் தீவிர ஆலோசனை-வாதாட ராம் ஜேத்மலானி

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரை சேர்த்துள்ளது. இதையடுத்து கனிமொழி வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவும் சம்மன் அனுப்பியுள்ளது.
கனிமொழி இல்லத்தில் தீவிர ஆலோசனை:
இந் நிலையில் கனிமொழியின் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்று வருவதாகத் தெரிகிறது.
நேற்றைய ஆலோசனையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் நேரு, துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
திராவிட கழக தலைவர் வீரமணியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.
கனிமொழிக்காக வாதாட ராம் ஜேத்மலானி?:
இந் நிலையில் நாளை மறுதினம் சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி நேரில் ஆஜராகும்போது அவர் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடுவார் என்று தெரிகிறது.
ராம்ஜேத்மலானி பாஜகவைச் சேர்ந்தவர், ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications