பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறது. இதையொட்டி பல விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கிறது.
விருது பெறுபவர்கள் விவரம்,
அம்பேத்கர் சுடர் விருது - பாமக நிறுவனர் ராமதாஸ்
பெரியார் ஒளி விருது - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்
காமராசர் கதிர் விருது - மூத்த எழுத்தாளர் சோலை
அயோத்திதாசர் ஆதவன் விருது- பவுத்த பெரியார் சுந்தரராசன்(மறைவு)
காயிதே மில்லத் பிறை விருது - பேராசியிரியர் காதர் மைதீன்
செம்மொழி ஞாயிறு விருது - கவிஞர் தணிகைச் செல்வன்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படையின் அத்துமீறல்
அமெரிக்கப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை சுட்டுக் கொன்றது அத்துமீறிய செயலாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது அமெரிககாவின் அரச பயங்கரவாதம். இன்னொரு நாட்டில் நுழைந்து அதன் இறையாண்மையில் தலையிடும் அமெரி்க்காவை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications