பின்லேடன் வசித்த வீட்டைக் கட்டிய காண்டிராக்டர் கைது

நேற்று இவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் குல் முகம்மது. ஆனால் இவரை பெரும்பாலும் செல்லமாக குல் மதா அல்லது மிது கான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாம். இவர் அபோதாபாத் அருகில் உள்ள பிலால் நகரில் வசித்து வருகிறார். இவரை நேற்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
50 வயதாகும் குல் முகம்மது, கைபர்-பக்தூன்கவா மாகாணத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளாகத்தான் அபோதாபாத் அருகே வசித்து வருகிறார். எனவே பின்லேடனுக்காகவே இவர் இந்தப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவருக்கும் பின்லேடனுக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதுபோக வீடு கட்ட உதவியர்கள், கட்டுமானப் பணிக்கு பொருட்களைக் கொடுத்து உதவியர்கள் என பல தரப்பினரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஹிஸ்புல் முஜாஹிதினுக்கு சொந்தமான வீடு?
இதற்கிடையே, பின்லேடன் வசித்து வந்த வீடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்குச் சொந்தமான வீடு என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த அமைப்பினர்தான் லேடனை பாதுகாப்பாக இங்கு கொண்டு வந்து தங்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications