புல்லட் பாய்ந்ததால் பிளந்து போன பின்லேடன் தலை!

தலையில் குண்டு பாய்ந்ததில், பின்லேடனின் மண்டை ஓடு பிளந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பார்க்கவே படு கோரமாக இருப்பதால்தான் இந்தப் படத்தை வெளியிட அமெரிக்கா தயங்குவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வெளியிட்டால், உலகம் முழுவதும் பின்லேடன் மீது பச்சாதாப உணர்வு வந்து விடுமோ என்று அமெரிக்கா பயப்படுகிறது.
பின்லேடன் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்க செனட் சபையின் புலனாய்வுப் பிரிவு தலைவரான டியான் பெய்ன்ஸ்டீன் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்,
கிட்டத்தட்ட 38 நிமிடங்களுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. மேல் மாடி வழியாக உள்ளே புகுந்த அமெரிக்க சீல் படையினர், மேல் மாடியில் இருந்த பின்லேடனைப் பார்த்ததும் அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது பின்லேடனிடம் ஆயுதம் எதுவும் இல்லை. ஆனால் அவருக்குப் பக்கத்தில் ஆயுதங்கள் இருந்துள்ளன.
அதை அவர் எடுக்க எத்தனிப்பதற்குள் அமெரிக்கப் படையினர் அதி வேகமாக சுட்டுள்ளனர். ஒரு குண்டு அவரது நெற்றிப் பொட்டில் பட்டு தலையை துளைத்துச் சென்றது. இதில் கபாலம் பிளந்துவிட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்தது. அதி வேகமாக நடந்த இந்த தாக்குதலால் பின்லேடன் உடனடியாக மாண்டு போனார் என்றார்.
இன்னொரு அதிகாரி கூறுகையில், பின்லேடன் சரணடைய மறுப்பது போல நடந்து கொண்டதாலும், ஆயுதத்தை எடுக்க எத்தனிப்பது போல நகர்ந்ததாலும் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தினர் என்றார்.
பின்லேடன் உடல் மற்றும் அவரது தலை ஆகியவை அடங்கிய புகைப்படங்களைப் பார்த்த ஒரு அமெரிக்க அதிகாரி கூறுகையில், பின்லேடனின் இடது கண்ணுக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது. அதி வேகமாக பாய்ந்ததால் தலையின் மேற் பகுதி அப்படியே பிளந்து போய் விட்டது. இன்னொரு குண்டு நெஞ்சில் பாய்ந்துள்ளது என்றார்.
பையில் இருந்த யூரோ பணம்:
பின்லேடனைக் கொன்ற பின்னர் உடலைக் கைப்பற்றிக் கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு விரைந்த அமெரிக்கப் படையினர் பின்லேடன் வீட்டிலிருந்த பல பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
10 ஹார்ட் டிரைவ்ககள், ஐந்து கம்ப்யூட்டர்கள், 100க்கும் மேற்பட்ட சிடி, டிவிடிக்கள் ஆகியவை இதில் அடக்கம். மேலும் பின்லேடனின் சட்டைப் பையில் 500 யூரோ பணம் இருந்ததாகவும், சில தொலைபேசி எண்கள் இருந்ததாகவும் தெரிகிறது.
ஐந்து செல்போன்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள், ஏ.கே.47 உள்ளிட்ட ஐந்து துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏதாவது ஆபத்து நேரிட்டால் உடனடியாக தப்பிப் போகும் அளவுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளுடன் பின்லேடன் இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அமெரிக்கப் படையினரின் மின்னல் வேகத் தாக்குதலிலிருந்து அவனால் தப்ப முடியாமல் போய் விட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications