பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி யு.எஸ். ஏவுகணைத் தாக்குதல்-8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி இன்று அந்த நாட்டுக்குள் டிரோன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அபோத்தாபாத் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான், தனது நாட்டு எல்லைக்குள் அத்துமீறியத் தாக்கிய அமெரிக்காவை கண்டித்துள்ளது. தொடர்நது இதுபோல தாக்குதல்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அது கூறியுள்ளது.
ஆனால் அந்த எச்சரிக்கையை அமெரிக்கா புறக்கணித்து விட்டது. இன்று வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தத்தா கேல் என்ற இடத்தில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட கையோடு மீண்டும் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications