கோவையில் இன்று முதல் அரசு பொருட்காட்சி
கோவை: கோவை காந்திபுரம் சிறை மைதானத்தில் இன்று மே-8ம்தேதி முதல் 60 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடைபெற இருக்கிறது.
அரசு துறைகள்
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, வனத்துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலத்துறை, மருத்துவக் கல்வி துறை, சிறு சேமிப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்கள்
இந்த பொருட்காட்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன. புதுமையான ராட்டினங்கள், விளையாட்டு சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
நுழைவுக்கட்டணம்
இந்த பொருட்காட்சியைக் காண நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications