விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில், விடைத்தாள் நகல் கோருவோர், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் அதற்காக விண்ணப்பிக்கலாம்.
அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
25ம் தேதி மதிப்பெண் பட்டியல்
வருகிற 25ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும்.












Click it and Unblock the Notifications