புழல் சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய அத்தனை பேரும் பாஸ்
சென்னை: புழல் மத்திய சிறையில் பிளஸ்டூ தேர்வு எழுதிய 23 கைதிகளும் பாஸ் செய்துள்ளனர். அதிலும் சத்யன் என்ற ஆயுள் தண்டனைக் கைதி 901 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 4 பெண்களும், 19 ஆண்களும் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தலா வேலூர், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். திருச்சியைச் சேர்ந்தவர்கள் 4 பேர். இவர்கள் அனைவரும் ஆண்கள். இவர்கள் போக 4 பெண் கைதிகளும் தேர்வு எழுதியிருந்தனர். சிறை வளாகத்திலேயே இவர்கள் தேர்வு எழுதியிருந்தனர்.
இவர்கள் அனைவருமே தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இந்தக் கைதிகளுக்கு பாடம் நடத்துவதற்காக சிறை அதிகாரிகள் சண்முக சுந்தரம், ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்து பாடம் சொல்லித் தரப்பட்டது. அதை கவனமாக படித்து இந்தக் கைதிகள் தற்போது பாஸ் செய்து சிறை அதிகாரிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளனர். மேலும் இந்தக் கைதிகளுக்குப் பாடம் நடத்தியவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளே. இவர்கள் போக வெளியிலிருந்தும் தமிழ் பாடத்திற்காக ஒரு ஆசிரியரை வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுத்துள்ளனர்.
கைதிகளிலேயே அதிக மதிப்பெண் பெற்றவர் சத்யன் என்பவர். இவர் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி. இவர் 1200க்கு 901 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர் மேல் படிப்பு படிக்க விரும்புகிறார். இவருக்கான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications