ஸ்கைப்பை வாங்க முயற்சிக்கும் கூகுள், பேஸ்புக்!!

ஸ்கைப்பை வாங்குவது குறித்து தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஸுகர்பர்க் பங்கேற்றதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த டீலில் தன்னுடன் லக்சம்பர்க்கைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள ஸுகர்பர்க் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இன்னொரு பக்கம் ஸ்கைப்பை தன்வசப்படுத்த கூகுள் நிறுவனமும் கடும் முயற்சி செய்து வருகிறது.
ஸ்கைப்பின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகையை கொடுத்து வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டுமே தயாராக உள்ளன.
ஆனால், இதற்கான பேச்சுக்கள் இப்போதுதான் முதல்கட்டத்தில் இருப்பதாகவும், பொருத்தமான நேரத்தில் இந்த டீல் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் ஸ்கைப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2003-ல் ஆரம்பிக்கப்பட்டது ஸ்கைப். 2005-ல் 3.1 பில்லியன் டாலர் கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்கியது இபே. 2009-ல் ஸ்கைப்பிலிருந்த தனது பெரும்பான்மைப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனத்துக்கு விற்றது இபே. ஆனால் இப்போதும் மூன்றில் ஒரு அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது இபே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 1 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய பங்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தது ஸ்கைப். ஆனால் இந்த முயற்சி தாமதமாகி வருவதால், நிறுவனம் கைமாறுவது குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன.
கூகுள் ஏற்கெனவே கூகுள் வாய்ஸ் என்ற நிறுவனத்தை தன்வசம் வைத்துள்ளது. ஸ்கைப் செய்யும் சேவையைத்தான் கூகுள் வாய்ஸும் செய்கிறது. எனவே பேஸ்புக் நிறுவனத்திடம் ஸ்கைப் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications