டிஎன்ஏ சோதனைக்கு ரத்த மாதிரியைத் தர என்.டி.திவாரிக்கு உத்தரவு
டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உ.பி. மாநில முதல்வராக, உத்தரகாண்ட் மாநில முதல்வராக, ஆந்திர மாநில ஆளுநராக இருந்தவர் என்.டி.திவாரி. கடைசியாக இவர் ஆந்திர ஆளுநராக இருந்தபோது பெண்களுடன் ஆளுநர் மாளிகையில் கொட்டமடித்து சிக்கி பதவியை விட்டு விலகிச் சென்றார்.
அவர் மீது உ.பியைச் சேர்ந்த ரோஹித் சேகர் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எனது தாயார் உஜ்வாலா சர்மாவுக்கும், என்.டி.திவாரிக்கும் இடையே ஏற்பட்ட உறவில் நான் பிறந்தேன். என்னை தனது மகனாக ஏற்க திவாரி மறுக்கிறார். ஆனால் அவர்தான் எனது தந்தை. எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நீண்ட காலமாக சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
சேகரின் தந்தைதான் திவாரியா என்பதை உறுதி செய்ய திவாரிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அதற்கு ஒத்துழைக்க திவாரி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி திவாரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அவரது ரத்த மாதிரியைத் தர வேண்டும் என்று இன்று கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற இணைப் பதிவாளர் தீபக் கார்க் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய திவாரி, ரோஹித் சேகர், அவருடைய தாயார் உஜ்வாலா சர்மா ஆகியோர் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அனைவரும் ரத்த மாதிரியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திவாரி உள்ளிட்ட மூன்று பேரின் ரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதிக்க டாக்டர் ஒருவரையும் கோர்ட் ஏற்கனவே நியமித்துள்ளது. இந்த டிஎன்ஏ சோதனைக்கான செலவுகளை மூன்று பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் சோதனை நடைபெறவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications