பின்லேடன் மனைவியரை விசாரிக்க அமெரிக்காவுக்கு பாக். அனுமதி
டெல்லி: ஒசாமா பின்லேனின் மனைவியரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது.
பின்லேடன் தங்கியிருந்த பாகிஸ்தான் வீட்டை, அமெரிக்கப் படையினர் வேட்டையாடியபோது அங்கு அவரின் 3 மனைவியரும் இருந்தனர். அவர்களை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைத்து விட்டு பின்லேடன் அமெரிக்க வீரர்கள் பறந்து விட்டனர்.
அதன் பின்னர் பின்லேடன் மனைவியரிடம் விசாரணை நடத்த பாகிஸ்தானிடம் அனுமதி கோரியிருந்தது அமெரிக்கா. ஆனால் இதுதொடர்பாக இழுத்தடித்து வந்த பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவின் மிரட்டல் கலந்த நெருக்குதலைத் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் எப்போது, எங்கு வைத்து விசாரணை நடைபெறும் என்பது தெரியவில்லை. மூன்று மனைவியர் தவிர 9 குழந்தைகளும் பின்லேடன் தங்கியிருந்த வீட்டில் இருந்தனர். அவர்களையும் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டனர்.
முன்னதாக விசாரணை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், பின்லேடனின் மனைவியரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாகவும், பாகிஸ்தானியப் படையினர் பின்லேன் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ள சில பொருட்கள் குறித்து விசாரிக்கவும் நாங்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications