மதுரைக்கு வந்த 'தமிழ்' சோதனை-பெயிலாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதைப் பார்த்த மதுரை மாணாக்கர்கள் பலருக்கும் அதிர்ச்சி. காரணம், பலர் தமிழில் பெயில் ஆகியுள்ளனர்.
இந்த ஆண்டு பிளஸ்டூ தமிழ்ப் பாடத்தில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 209 ஆகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பெரும் வருத்தமும், கவலையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு தமிழில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. 2010ல் இது 111 ஆக எகிறியது. .இன்த ஆண்டு 209 ஆக உயர்ந்து தமிழ் ஆர்வலர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையில் இப்படி ஒரு அவலமா என்ற அதிர்ச்சி அலைகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து விரிவான அறிக்கை தருமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரத்னமாலாவுக்கு ஆட்சித் தலைவர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சகாயம் கூறுகையில், தாய் மொழியிலேயே மாணவ, மாணவியர் தோல்வி அடைவது என்பது பெரும் கவலைக்குரிய விஷயமாகும். இதற்கான தீர்வு காணப்பட்டே ஆக வேண்டும். இந்த நிலையை மாற்றியாக வேண்டும். தமிழில் மாணவர்கள் அதிக அளவில் பெயிலாவது குறித்த காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
அதேசமயம், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மதுரையில் அதிகரித்து வருகிறதாம். கடந்த 2010ல் ஆங்கிலத்தில் பெயிலானவர்கள் எண்ணிக்கை 601 ஆக இருந்தது. இந்த ஆண்டு வெறும் 284 பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரத்னமாலா கூறுகையில், ஆங்கிலப் பாடத்தில் அதிக அளவில் பெயிலாகி வருவதால் அதைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தாய் மொழியில் மாணவர்கள் கோட்டை விட்டு விட்டனர். வார்த்தைப் பிழை, இலக்கணப் பிழை காரணமாகத்தான் நிறையப் பேர் பெயிலாகியுள்ளனர் என்று கருதுகிறோம் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications