கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத இன்டர்நெட் மையங்களின் உரிமம் ரத்து: மதுரை கமிஷனர்
மதுரை: மதுரையில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத இன்டர்நெட் மையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மதுரை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் சி.டி. கடைகளில் ஆபாச படம் மற்றும் புதுப்பட சி.டி.க்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 ஆயிரம் சிடிகள் பறிமுதல் செய்யப்பட்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும செல்போன் கடைகளில் புதுசெல்போன் வாங்கினால் ஆபாச படங்கள் இலவசமாக பதிவு செய்து கொடுப்பது தெரிய வந்தது. இது சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் மாணவர்கள் ஆபாச படங்கள் பார்த்து வருவதாகவும், மேலும் செல்போன்களில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
செல்லூரில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்தில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கிருந்த 9 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் கட்டாயம் பொருத்தவேண்டும் என்றும், மையத்திற்கு வருபவர்கள் குறித்து முறையான பதிவேடும், அவர்களின் முழு முகவரியையும் சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத இன்டர்நெட் மையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications