கனிமொழிக்கு மீண்டும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு வரக் கோரி சம்மன்
Subscribe to Oneindia Tamil

நேற்று இவர்கள் இருவரும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்கள். அப்போது மே 13ம் தேதியும் விசாரணைக்கு வருமாறு இருவரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு வேறு தேதிக்கு விசாரணையை மாற்றுமாறு இருவரது தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து மே 20ம் தேதி வாக்கில் அடுத்த விசாரணை தேதி குறித்து அமலாக்கப் பிரிவு முடிவு செய்து சம்மன் அனுப்பவுள்ளது.
நேற்று நடந்த விசாரணையின்போது அதிகாரிகளிடம் கனிமொழி கூறுகையில், சென்னையில் மே 13ம் தேதி வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதால், வேறு தேதிக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
நேற்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications