2 ஜி: எஸ்ஸார் சிஇஓ பிரசாந்த் ருயாவிடம் சிபிஐ விசாரணை
டெல்லி: ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு சிபிஐ முன் ஆஜராகி பதிலளித்தார் எஸ்ஸார் நிறுவன சிஇஓ பிரசாந்த் ரூயா.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரசாந்த் ருயியா டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் ஏற்கனவே ஒரு முறை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ள நிலையில் நேற்று 2-வது கட்டமாக விசாரணை நடந்தது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற லூப் டெலிகாம் நிறுவனத்துடன் எஸ்ஸார் நிறுவனத்துக்குள்ள தொடர்புகள் குறித்து இந்த விசாரணையின் போது பிரசாந்த் ருயாவிடம் கேள்விகளை எழுப்பியது சிபிஐ.
வோடாபோன்- எஸ்ஸார் கூட்டு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்திடம் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications