ஜெயலலிதா மீதான கிப்ட் செக் வழக்கு ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: தனது பிறந்த நாளுக்கு வந்த காசோலைகளை அரசுக் கணக்கில் சேர்க்காமல் தனது கணக்கில் போட்டுக் கொண்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது அவரது பிறந்த நாளுக்கு கிப்ட் காசோலைகள் ரூ. 2 கோடி அளவுக்கு வந்தது. முதல்வர் பதவியில் ஜெயலலிதா இருந்ததால் அதை அரசுக் கணக்கில்தான் அவர் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அதை தனது கணக்கிலேயே போட்டுக் கொண்டார்.
இதையடுத்து சிபிஐ கோர்ட்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஜெயலலிதா தவிர செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் அது ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications