ஆப்கானிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டார் மன்மோகன் சிங்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் பின்னர் இன்று அவர் ஆப்கானிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றார். 2 நாள் அங்கு அவர் பயணம் செய்கிறார்.
தீவிரவாதம், பிராந்திய வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் அவர் விவாதிக்கவுள்ளார்.
அதிபர் ஹமீத் கர்ஸாயையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவிகள் உள்ளிட்டவை குறித்து கர்ஸாயுடன் முக்கியப் பேச்சு நடத்தவுள்ளார்.
பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ், பிரதமரின் சிறப்புத் தூதர் சதீந்தர் லம்பா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications