மதுரை மேற்குத் தொகுதியில் மறு வாக்குப் பதிவு கிடையாது-தேர்தல் ஆணையம்

இதன் மூலம் மதுரை மேற்குத் தொகுதிக்கு மறு வாக்குப் பதிவு கிடையாது என்பதை தேர்தல் ஆணையம் விளக்கி விட்டது.
மதுரை மேற்குத் தொகுதியில் அதிகாரிகள் நடத்திய வேட்டையின்போது ஒரு நபரிடமிருந்து டைரி ஒன்று சிக்கியது. அதில் எந்தெந்தப் பகுதியில் யார் யாருக்குப் பணம் தரப்பட்டது என்ற பட்டியல் இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சகாயத்திடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியிருந்தது. அவரும் அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, மற்ற இரு ஆணையர்களுடன் சந்தித்தார். அப்போது மதுரை மேற்குத் தொகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையர் சம்பத் கூறுகையில்,
"மதுரை மேற்கு தொகுதி தேர்தல் குறித்து மாநில தேர்தல் கமிஷனர் விளக்கம் கேட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்தார். அதன் அடிப்படையில் இந்த பிரச்சினை முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது என்றார்.
தமிழக தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையில், தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு மட்டும் ரூ. 60 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது பல்வேறு புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications