விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நேற்று காலை மத்திய தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜி மேற்பார்வையில், கலெக்டர் பழனிசாமி, டி.ஆர். ஓ. வெங்கடாசலம், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியா தலைமையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது, தி.மு.கவைச் சேர்ந்த பொன்முடி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் அங்கு இருந்தனர்.
முதல் சுற்றில் சண்முகம் 4787 வாக்குகளும், பொன்முடி 4720 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து 8 ரவுண்டுகள் வரை பொன்முடி பின் தங்கிய நிலையில் இருந்தார்.
ஆனால், 9 வது ரவுண்டில் மட்டும் 495 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலைக்கு வந்தார் பொன்முடி.
இந்த நிலையில், மாலை 4. 45 மணி அளிவில் 16 வது சுற்று அறிவித்த போது, அமைச்சர் பொன்முடி தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். அப்போது சிலர் பொன்முடியின் காரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற டி.ஸ்.பி. மாதவன் தலைமையிலான போலீசார் கல்வீசி தாக்கியவர்களை விரட்டியடித்தனர். இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications